நல்
நுதல் மடந்தையர் மடங்கெழு நோக்கின் - நல்ல நெற்றியினையுடைய மகளிர் தம் எழில்
பொருந்திய பார்வையானே, மத முகம் திறப்புண்டு - தன்னிடத்தே மதம் வெளிப்பட்டு,
இடம் கழி நெஞ்சத்து இளமை யானை - வரம்பு கடந்து செல்லும் உள்ளத்தினையுடைய இளமையாகிய
யானை, கல்விப் பாகன் கை அகப்படா அது ஒல்கா உள்ளத்து ஓடும் ஆயினும் - கல்வியாகிய
பாகனுக்கு உட்படாது தளராத ஊக்கத்தோடே ஓடினும், ஒழுக்கொடு புணர்ந்த இவ் விழுக்குடிப்
பிறந்தோர்க்கு இழுக்கம் தாராது - நல்லொழுக்கத்தோடே ஒன்றிய இச் சிறந்த குடியின்கண்
தோன்றியோர்க்குக் குற்றத்தினைச் செய்யாது ;
மதம்
- இளமைக்கும் யானைக்கும் ஏற்பக் கொள்க. இடங்கழி - வரம்பு கடக்கை ; கழி காமமுமாம்;
1"இடங்கழி மான்மாலையெல்லை" என்பதன்
உரை காண்க. இளமையாற் காமம் மீதூரப் பெறினும் நெறி தவறிச் செல்லார் என்றபடி.
2"இடங்கழி காமமொடடங்கா னாகி,"
3"கல்விப் பாகரிற் காப்புவலை
யோட்டி" என்பன ஈண்டு அறியற்பாலன.
1
புறப். வெண்பா. 12 : 5. 2 மணி.
10 ; 22. 3 மணி. 18 : 165.
|