|
5
|
முலையிழந்து வந்துநின்றீர் யாவிரோவென
முனியாதே
மணமதுரையோ டரசுகேடுற வல்வினைவந் துருத்தகாலைக்
கணவனையங்கு இழந்துபோந்த கடுவினையேன் யானென்றாள்
|
|
முனியாதே
- அங்ஙனங்கேட்ட அவர்களை வெகுளாதே, மண மதுரையோடு அரசு கேடுற வல்வினை வந்து உருத்தகாலைக்
கணவனை அங்கு இழந்து போந்த கடுவினையேன் யான் என்றாள் - தீவினை தன் பயனை அளிக்கத்
தோன்றிய காலத்து மணம் நிறைந்த மதுரை நகரத்தோடே அரசனும் கெட்டொழிய என் கணவனை
அம் மதுரை யிடத்தே இழந்து வந்த தீவினையுடையேன் யான் என்று கூறினாள் ;
மணம் நிறைதலை 1"அளந்துணர் வறியா
வாருயிர் பிணிக்கும், கலவைக் கூட்டங் காண்வரத் தோன்றி" என்பது முதலியவற்றானறிக
; கலியாண மதுரை யென்பர் அரும்பதவுரையாசிரியர். |
1சிலப்.
13 : 128--9.
|
|