|
|
சீர்கெழு செந்திலும் செங்கோடும்
வெண்குன்றும்
ஏரகமு நீங்கா இறைவன்கை வேலன்றே
பாரிரும் பௌவத்தி னுள்புக்குப் பண்டொருநாள்
சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே; (7)
|
|
பார்
இரும் பௌவத்தின் உள் புக்குப் பண்டு ஒருநாள் சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே
- பாரினைச் சூழ்ந்த பெரிய கடலின் நடுவிடத்தே புக்கு முன்னொரு காலத்துச் சூரபதுமனாகிய
மாவினை அறுத்த ஒளி பொருந்தும் இலையினையுடைய வெள்ளிய வேல், சீர் கெழு செந்திலும்
செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல் அன்றே - சிறப்புப் பொருந்திய
திருச்செந்திலும் திருச்செங்கோடும் சுவாமிமலையும் ஏரகமும் ஆய இவ்விடங்களின் நீங்காத
முருகன் கையிடத்ததாகிய வேலேயாம் ;
செந்தில் - திருச்செந்தூர் ; திருச்சீரலைவாய்.
வெண்குன்று - சுவாமிமலை என்பது அரும்பதவுரை. ஏரகம் - 1மலைநாட்டகத்ததொரு
திருப்பதி என்பர் நச்சினார்க்கினியர். பார் - பாறையுமாம் ; 2"பாயிரும்
பனிக்கடல் பார்துகள் படப்புக்கு" என்பதன் உரை காண்க, முருகன் கடலுட் புக்குச் சூர்மா
தடிந்ததனை, 3"பார்முதிர் பனிக்கடல்
கலங்கவுள் புக்குச், சூர்முத றடிந்த சுடரிலை நெடுவேல்" என வருவதனானறிக. சுடரிலைய வெள்வேல்
இறைவன் கைவேலன்றே என மாறுக. இலைய ; அ, இடைச் சொல், அன்றே என்பது தேற்றப் பொருட்டாய்
நின்றது. வேலே என்பதன்கண் ஏகாரம், அசை. |
1
முருகு. 189-(உரை).
2 பரி. 5: 1.
3 முருகு, 45. 6.
|
|