|
|
செறிவளைக்கை நல்லாய் இதுநகையா
கின்றே
வெறிகமழ் வெற்பனோய் தீர்க்க வரும்வேலன்
வேலன் மடவன் அவனினுந் தான்மடவன்
ஆலமர் செல்வன் புதல்வன் வருமாயின் ; (12)
|
|
செறி
வளைக்கை நல்லாய் இது நகையாகின்றே வெறி கமழ் வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்
- செறிந்த வளையலை அணிந்த கையினையுடைய தோழீ மணங் கமழும் வெற்பன் தந்த நோயினைத்
தீர்ப்பதற்கு வேலன் வருவான் இச் செயல் நகைத்தற்கு உரித்து, வேலன் மடவன் - அங்ஙனம்
வரும் வேலன் அறியாமை யுடையன், அவனினும் தான் மடவன் ஆல் அமர் செல்வன் புதல்வன் வருமாயின்
- கல்லாலின் கீழ் அமர்ந்த செல்வனாகிய சிவபிரானுடைய புதல்வன் ஈங்கே வருவானாயின்
அவ்வேலனிலும் தான் அறியாமையுடையன் ;
வெறி கமழ் என்ற அடை வெற்பனுக்கும்
வெற்புக்கும் பொருந்தும். புதல்வன் வருமாயின் அவனினும் மடவன் என்க. |
|