|
|
குறமகள் அவளெம குலமகள் அவளொடும்
அறுமுக வொருவநின் அடியிணை தொழுதேம்
துறைமிசை நினதிரு திருவடி தொடுநர்
பெறுகநன் மணம்விடு பிழைமண மெனவே ; (17)
|
|
குறமகள் அவள் எம் குல மகள் அவளொடும் அறுமுக ஒருவ - ஆறுமுகத்தினையுடைய ஒப்பற்றோய் குறமகளாகிய
அவள் எங் குடியிற் பிறந்த மகளாவாள்
அவளோடும், நின் அடியிணை தொழுதேம் - நின் இரு திருவடிகளையும் வணங்கினேம், துறைமிசை
நினது இரு திருவடி தொடுநர் பெறுக நன் மணம்-நீர்த் துறைக்கண்ணே நின்னிரு திருவடிகளிற்
சூளுற்ற தலைவர் பிழைபடா மணத்தைப் பெற்றிடுக, விடு பிழை மணம் எனவே - குற்றமுடைய மணம்
ஒழிவதாக என்று;
அவள் எம் குல மகள் என்றது தாம் உரிமையின்
வணங்குதற் கோர் தொடர்பு கூறியவாறு. எம என்பதன் கண் அகரம், அசை நிலை. ஈண்டும் இருவர்
அடியையுமெனக் கொள்க. அடிதொடுதல் - அடிதொட்டுச் சூளுறுதல். முருகன் உறையுமிடம் 1"யாறும்
குளனும்" என்பராகலின் 'துறைமிசை...தொடுநர்' என்றாள். தொடுநர் மணத்தைப் பெறக் கடவேம்
என்றுமாம். பிழை மணம் - அயலார் மணம். விடு - விடப்படுத லென்னும் பொருட்டு. பெறுக
வெனவும், ஒழிக வெனவும் இணையடி தொழுதேம் என்க. இவை எட்டும் தோழி சிறைப் புறமாகக்
கூறியது; 'இறைவனை' முதலிய நான்கும் தலைவி அறத்தொடு நின்றதுமாம்.
|
1
முருகு. 224.
|
|