1. குன்றக் குரவை

(23)



வானக வாழ்க்கை யமரர் தொழுதேத்தக்
கான நறுவேங்கைக் கீழாளோர் காரிகையே
கான நறுவேங்கைக் கீழாள் கணவனொடும்
வானக வாழ்க்கை மறுதரவோ வில்லாளே



23
உரை
23

        வானக வாழ்க்கை அமரர் தொழுது ஏத்தக் கான நறு வேங்கைக் கீழாள் ஓர் காரிகையே - துறக்க வாழ்க்கையினை உடைய தேவர்கள் வணங்கிப் போற்றக் காட்டிடத்து மணங்கமழும். வேங்கை மரத்தடியில் அமர்ந்தாள் ஓர் நங்கை, கான நறுவேங்கைக் கீழாள் கணவனொடும் வானக வாழ்க்கை மறு தரவோ இல்லாளே - காட்டிடத்து நல்ல வேங்கையின் அடியில் அமர்ந்த அவள் தன் கணவனோடும் துறக்க வாழ்வினின்றும் மீட்சியிலளாயினாள்;

       கண்ணகி தன் கணவனொடும் வானவூர்தி ஏறித் துறக்கம் புக்கது கண்ட குற மகளிர் அவர் மீண்டும் வரக்காணாமையான் மறுதரவில்லாள் என்றார் என்க. மறுதரவு - மீட்சி.