|
(24)
|
மறுதர வில்லாளை ஏத்திநாம் பாடப்
பெறுகதில் லம்ம விவ்வூரு மோர்பெற்றி
பெற்றி யுடையதே பெற்றி யுடையதே
பொற்றொடி மாதர் கணவன் மணங்காணப்
பெற்றி யுடையதிவ் வூர்
|
|
மறுதரவு இல்லாளை ஏத்தி நாம் பாடப் பெறுகதில் அம்ம இவ் வூரும் ஓர் பெற்றி - அங்ஙனம்
மீளவில்லாத அக் கற்புடையாளை நாம் போற்றிப் பாட இவ் வூரும் ஓர் நோன்பினைப் பெறுவதாக,
பெற்றியுடையதே பெற்றியுடையதே பொற்றொடி மாதர் கணவன் மணங்காணப் பெற்றி உடையது இவ்வூர்
- பொற்றொடி நங்கை தன் கணவனது வரைவினைக் காண இவ்வூர் ஓர் நோன்பினையுடையது;
தில், விழைவின்கண் வந்தது. பெற்றி
- நோன்பு; பெருமையுமாம். இவ்வூர் கணவன் மணத்தைக் காணப் பெற்றியுடையது என்றுமாம். |
|