1. குன்றக் குரவை

25



என்றியாம்
கொண்டு நிலைபாடி ஆடும் குரவையைக்
கண்டுநம் காதலர் கைவந்தா ரானாது
உண்டு மகிழ்ந்தானா வைகலும் வாழியர்
வில்லெழுதிய இமயத்தொடு
கொல்லி யாண்ட குடவர் கோவே.



25
உரை
25

        .என்று யாம் கொண்டு நிலை பாடி ஆடும் குரவையைக் கண்டு நம் காதலர் கை வந்தார் - இன்னணமாக யாம் கொண்டு நிலையாகிய பாட்டினைப் பாடி ஆடுகின்ற குரவைக் கூத்தினைக் கண்டு நம் காதலர் நம் வழியிலே பட்டார், வில் எழுதிய இம யத்தொடு கொல்லி ஆண்ட குடவர் கோவே - தன் வில்லினைப் பொறித்த இமய மலையோடு கொல்லி மலையினையும் ஆண்ட குடநாட்டார் வேந்தன், ஆனாது உண்டு மகிழ்ந்து ஆனா வைக லும் வாழியர் - அமையாதே வீர பானத்தை உண்டு களித்து எண்ணிலமையாத நாள்களெல்லாம் வாழ்வானாக.

       கொண்டுநிலை - குரவையில் ஒருவர் கூற்றினை ஒருவர் கொண்டு கூறுஞ் செய்யுளென்பர் நச்சினார்க்கினியர்; 1"குரவை தழீ இ யாமாடுங் குரவையுட், கொண்டுநிலை பாடிக்காண்" என்பதன் உரை காண்க. அரசனை வாழ்த்தி முடித்தல் மரபு.

இது தலைமகட்குத் தோழி வரைவு கூறியது.

இச் செய்யுள் கொச்சகக் கலி

குன்றக் குரவை முற்றிற்று.