1. குன்றக் குரவை





யாதொன்றுங் காணேம் புலத்தல் அவர்மலைப்
போதாடி வந்த புதுப்புனல்
போதாடி வந்த புதுப்புனல் மற்றையார்
மீதாடி னோம்தோழி நெஞ்சன்றே;       (5)



5
உரை
5

       யாது ஒன்றுங் காணேம் புலத்தல் அவர் மலைப் போது ஆடி வந்த புதுப்புனல் - அவர் மலைக்கண் பூக்களோடு கலந்து வந்த புதிய நீரோடு புலத்தற்கு யாம் அதனிடைச் சிறிது பிழையுங் கண்டிலேம், போதாடி வந்த புதுப்புனல் மற்றையார் மீது ஆடின் நோம் தோழி நெஞ்சு அன்றே - ஆயின், அவ்வாறு மலரோடு கலந்து வந்த புதிய நீரின்கண் மற்றைப் பெண்டிர் மேம்பட ஆடினால் தோழீ நம் உள்ளம் வருந்தும்;

       எற்றொன்றும் என்பது முதலாகிய மூன்றும் சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. கந்தருவ மாரக்கத்தால் இடை மடக்கி வந்தன.

       பாட்டு மடை - பாட்டினை மடுத்தல்.