|
Untitled Document
90
|
கொற்ற வேந்தன் கொடுங்கோல்
தன்மை
இற்றெனக் காட்டி இறைக்குரைப் பனள்போல்
தன்னாட் டாங்கண் தனிமையிற் செல்லாள்
நின்னாட் டகவயின் அடைந்தனள் நங்கையென்று
ஒழிவின் றுரைத்தீண் டூழி யூழி
வழிவழிச் சிறக்கநின் வலம்படு கொற்றமெனத் |
|
கொற்ற
வேந்தன் கொடுங்கோல் தன்மை இற்று எனக் காட்டி இறைக்கு உரைப்பனள் போல் - வெற்றியினை
உடைய பாண்டியனது கொடுங்கோலின் இயல்பு இஃதெனக் காட்டி நினக்குக் கூறுவாள் போன்று,
தன் நாட்டு ஆங்கண் தனிமையிற் செல்லாள் நின் நாட்டு அகவயின் அடைந்தனள் நங்கை -
கண்ணகி அவ் விடத்தினின்றும் தனியாகத் தன்னாட் டிற்குச் செல்லாளாய் நினது நாட்டின்கண்
சேர்ந்தனள்; என்று ஒழிவின்று உரைத்து - என்று யாவும் எஞ்சாமற் கூறி, ஈண்டு ஊழி ஊழி
வழி வழிச் சிறக்க நின் வலம்படு கொற்றம் என - இவ்வுலகத்தில் நின் மேன்மை பொருந்திய
வெற்றியா னது ஊழிதோறும் நின் வழியிலுள்ளார்க்கும் பின்னும் பின் னும் மிகுவதாக என்றியம்ப;
பாண்டியனது கொடுங்கோலின் தன்மையைச்
செங்கோலனாய நினக்கு உரைப்பாள் போன்று என்க. இது தற்குறிப்பு; இறை, முன்னிலைக்கண்
வந்தது. கோவலன் கொலையுண்டது முதலியவற் றைக் கூறிய சாத்தனார் பெருங்கோப்பெண்டு மாய்ந்ததனையும்
நங்கை அடைந்ததனையும் சிறப்புப் பற்றி வேறாக எடுத்துரைத்தா ரென்க. பின்னர் "மாதரோ
பெருந்திரு வுறுக" "பத்தினிக் கட வுளைப் பரசல் வேண்டும்" என வருதலுங் காண்க.
. |
|