Untitled Document
2. காட்சிக் காதை

தென்னர் கோமான் தீத்திறங் கேட்ட
மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன்


93
உரை
94

       தென்னர் கோமான் தீத் திறங் கேட்ட மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன் - பாண்டியனது கொடுந் தன்மையைக் கேள்வியுற்ற மன்னர் தலைவனாய குட்டுவன் வருந்தினனாய் உரைப்பவன் ;

       தென்னர் கோமான் - தென்னாட்டார் தலைவன். தீத் திறம் - பாண்டியன் உயிர் விட்டதும் கோவலற்கு ஊறு செய்ததுமாகிய இரண்டனையும் குறிக்கும்.