|
Untitled Document
110
|
உயிருடன் சென்ற ஒருமகள்
தன்னினும்
செயிருடன் வந்தவிச் சேயிழை தன்னினும்
நன்னுதல் வியக்கும் நலத்தோ ரியாரென
மன்னவன் உரைப்ப மாபெருந் தேவி |
|
ஆங்கு
உயிருடன் சென்ற ஒரு மகள் தன்னினும் செயிருடன் வந்த இச் சேயிழை தன்னினும் - அப்பொழுதே
கணவன் உயிரோடே கூடிச் சென்ற ஒப்பற்ற பெருங்கோப் பெண்டும் கணவனை இழந்த செற்றத்தோடே
இவண் வந்த இக் கண்ணகியுமாய இருவருள்ளும், நன்னுதல் வியக்கும் நலத்தோர் யார் என மன்னவன்
உரைப்ப - நன்னுதால் வியக்கத் தக்க சிறப்பினையுடையோர் யார் என்று மன்னன் கேட்ப
;
நன்னுதல், முன்னிலைப்பெயர். நலம்
- கற்பு மேம்பாடு. 4"பாம் பறியும் பாம்பின் கால்" என்றபடி, கற்புடை மகளிரியல்பு கற்
புடை மகளிர்க்கே புலனாமாகலின் 'நன்னுதல் . . . . . . யாரெனக்' கேட்டனன் என்க.
|
|