|
Untitled Document
110
|
மன்னவன் உரைப்ப மாபெருந்
தேவி
காதலன் துன்பம் காணாது கழிந்த
மாதரோ பெருந்திரு வுறுக வானகத்து
அத்திறம் நிற்கநம் அகல்நாடு அடைந்தவிப்
பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டுமென |
|
மா
பெருந் தேவி - அது கேட்ட இருங்கோ வேண் மாள், காதலன் துன்பம் காணாது கழிந்த மாதரோ
பெருந்திரு உறுக வானகத்து - தன் கணவன் இறந்தமையான் உண்டாம் துனபத்தினை அறியாதே இறந்த
கோப்பெருந்தேவி துறக்கத் துப் பெருஞ்செல்வம் பெறுக, அத் திறம் நிற்க -- அஃதொழிக,
நம் அகல் நாடு அடைந்த இப் பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும் என - நமது அகன்ற நாட்டினை
அடைந்த இக் கற்புக் கடவுளைப் போற்றுதல் வேண்டுமெனக் கூற;
மாபெருந்தேவி - பெருமையுடைய அரச மாதேவி;
இருங்கோ வேண்மாள். மாதர் - பாண்டியன் மனைவி. கணவன் இறந்த அப் பொழுதே அவளும் இறந்தாளாகலான்,
காதலன்றுன்பங் காணாது கழிந்த மாதர் என்றாள். அத்திறம் நிற்க - அது கூற வேண்டா என்ற
படி. ஈண்டுத் தேவி கூறிய விடை ஒட்ப நுட்பமுடையதாதல் அறிந்து இன்புறுதற்குரியது. இருவரும்
வியக்கு நலத்தோரே, எனினும் தம்மால் வழிபடற்குரியாள் பத்தினித் தெய்வமாம் என்பது
விடை யின் கருத்தாகும். |
|