|
Untitled Document
125
|
பொதியிற் குன்றத்துக்
கற்கால் கொண்டு
முதுநீர்க் காவிரி முன்றுறைப் படுத்தல்
மறத்தகை நெடுவா ளெங்குடிப் பிறந்தோர்க்குச்
சிறப்பொடு வரூஉஞ் செய்கையோ அன்று |
|
பொதியில்
குன்றத்துக் கற் கால்கொண்டு முதுநீர்க் காவிரி முன்துறைப்படுத்தல் - பொதியின் மலையில்
கல்லினைப் பெயர்த்துப் பழையதாய் வரும் நீரினையுடைய காவிரியாற்றின் துறைக்கண் நீர்ப்படுத்தல்,
மறத்தகை நெடுவாள் எம் குடிப் பிறந்தோர்க்குச் சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று
- மறத்தின் கூறுபாடமைந்த மாற்றார்க்குத் தீங்கு செய்யும் நீண்ட வாளினையுடைய எமது குடியிலே
தோன்றினார்க்குப் பெருமை யொடு பட்ட செயல் அன்றாம்;
முதுமையைக் காவிரிக்கு ஏற்றுக. மறத்தகை என்னும்
அடை வாளுக்கும் குடிக்கும் பொருந்தும் ; மறத்தகையும் நெடுவாளுமுடைய குடியெனலுமாம். சேய்மைக்
கண்ணதாய வேற்று நாட்டிலே சென்று பகை வென்று எடுத்துப் படுத்தலே வீரக்குடியிலே தோன்றி
னார்க்குப் பெருமையுடைய செய்கையாம் என்றானென்க.. |
|