புன்
மயிர்ச் சடைமுடிப் புலரா உடுக்கை - சிவந்த மயிர்களையுடைய சடைமுடியினையும் ஈரம் புலராத
உடையினை யும், முந்நூல் மார்பின் முத்தீச் செல்வத்து - மூன்று புரியானா கிய பூணூலணிந்த
மார்பினையும் மூன்று எரியாகிய செல்வத் தினையும் உடைய, இரு பிறப்பாளரொடு தேவ இருடிக
ளோடே, பெருமலை அரசன் - பெரிய மலையரசன், மடவதின் மாண்ட மா பெரும் பத்தினிக்
கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின் - இளமைக் காலத்தேயே மாட்சிமைப் பட்ட மிக்க
சிறப்பினையுடைய கற்புத் தெய்வத்தின் படிமஞ் செய்தற்கு ஓர் கல் தாராதொழிவனாயின்;
புல் - ஓர் நிறம் ; புல்லை யென
வழங்கும். புலரா வுடுக்கை யினைப் 1"புலராக்
காழகம் புலர வுடீஇ" என்பதனானுமறிக. முத்தீ - ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி.
இருபிறப்பு - உபநயனத்திற்கு முன்னொரு பிறப்பும் பின்னொரு பிறப்புமாகிய இரு பிறப்பு.
மகட்டருவார் பார்ப்பாரோடு கொடுத்தல் கருதி இரு பிறப்பாளரொடு கல்தாரானாயின் என்றார்.
இருபிறப்பாளர் - ஈண் டுத் தேவ இருடிகள். கண்ணகி. 2"சிறுமுதுக்
குறைவி" யாக லான், மடவதின் மாண்ட பத்தினி என்றார். எழுதல் - இயற்றுதல். இருபிறப்பாளரொடு
என்றமையானும், பின் மகட்பாற் காஞ்சி கூறுதலானும் கல்லினை மலையரையன் மகளாகக் கருதினான்
என்க.
|