நாவல்அம்
தண் பொழில் நண்ணார்ஒற்று நம் காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா - இந் நாவலந்
தீவில் பலவிடங்களிலு முள்ள பகைவர்களின் ஒற்றுக்கள் நமது காவலையுடைய வஞ்சி நகரின்
வாயிலிடத்தை நீங்காது நிற்பன ஆதலால், வம்பு அணி யானை வேந்தர் ஒற்றே தம் செவி
படுக்கும் தகைமைய அன்றோ - அவ் வொற்றுக்களே கச்சு அணிந்த யானையினையுடைய பகை மன்னர்
செவிக்கு அறிவிக்குந் தன்மையையுடையனவாம், அறை பறை என்றே அழும்பில் வேள் உரைப்ப
- ஆகலான், வட திசைச் செலவு குறித்து ஈண்டுப் பறையறைதலே அமையும் என அழும்பில் வேள்
என்பான் கூற;
பொழில் - உலகம், தீவு, ஒற்று -
ஒற்றர்; ஒற்றியறிபவர். ஒற்று என்ற சொற்கேற்பப் பிரியாவென அஃறிணை முடிபு கூறினார்.
ஒற்று வேந்தர்தஞ் செவிப்படுக்குமென்க; நின்றாங் குரைப்பினும் அமையும். அழும்பில்
வேள் செங்குட்டுவன் அமைச்சருள் ஒருவன் போலும், மேலும், 1"அழும்பில்
வேளோ டாயக் கணக்கரை"
என்பர். அழும்பில் - ஓரூர் என்பது
2"அழும்பி
லன்ன வறாஅ யாணர்" 3"மான
விறல்வே ளழும்பி லன்ன, நாடு" என்பவற்றா னறியப்படும். அழும்பில் - பாண்டி நாட்டூர்
என்பர் களிற்றியானை நிரையின் குறிப்புரைகாரர்.
|