Untitled Document
2. காட்சிக் காதை


65
மண்களி நெடுவேல் மன்னவற் கண்டு
கண்களி மயக்கத்துக் காதலோ டிருந்த

தண்டமி ழாசான் சாத்தனிஃ துரைக்கும்


64
உரை
66

       மண் களி நெடு வேல் மன்னவற் கண்டு - நிலமகள் களிப்பெய்துதற்குக் காரணமாகிய நீண்ட வேற்படையினை யுடைய செங்குட்டுவனை நோக்கி, கண் களி மயக்கத்துக் காத லோடு இருந்த - அவனது காட்சி கண் களித்தற்குக் காரணமான வியப்பைச் செய்தலால் ஆர்வத்துடன் அவணிருந்த, தண்டமிழ் ஆசான் சாத்தன் இஃது உரைக்கும் - தமிழ் ஆசிரியனாகிய கூல வாணிகன் சாத்தன் இதனைக் கூறுவான் ;

       
மயக்கம் - மருட்சி; வியப்பு. இஃதென்றது மேல் வருவதனை.