|
5
|
ஆசான் பெருங்கணி அருந்திற
லமைச்சர்
தானைத் தலைவர் தம்மொடு குழீஇ
மன்னர் மன்னன் வாழ்கென் றேத்தி
முன்னிய திசையின் முறைமொழி கேட்ப |
|
ஆசான்
பெருங்கணி அருந்திறல் அமைச்சர் தானைத் தலைவர் தம்மொடு குழீஇ - சேனைத் தலைவர்களுடன்
புரோகித னும், பெரு நிமித்திகனும், அரிய வலியுடைய அமைச்சர்களும் கூடி, மன்னர் மன்னன்
வாழ்க என்று ஏத்தி - அரசர்க்கரசே வாழ்வாயாக என்று துதித்து, முன்னிய திசையின் முறைமொழி
கேட்ப - கருதிய திசையில் நின்று அரசன் கூறும் மொழிகளை முறைமையாற் கேட்க ;
கணி - நிமித்திகன் ; சோதிடன்.
"ஆசான் - புரோகிதன் ; பெருங்கணி - கணிதவிவர்த்தகன்" என்பர் அரும்பதவுரையாசிரியர்.
ஆசான் பெருங்கணி யென்னும் இத் தொடர் இவ்வாறே இந்நூலின் கண் முன்ன1ரோரிடத்தும்,
பின்னர்2 ஓரிடத்தும் அமைந்துளதேனும்,
இக்காதையிற் பின் வேறு கூறப்பட்டிருத்தலின், ஆசானாகிய பெருங் கணி எனப் பொருள் கோடல்
சாலாதென்க.
|
1
சிலப். 22 : 8 2
சிலப் 28 : 222.
|
|