|
120
|
கோல்வளை மாதே கோலங்
கொள்ளாய்
காலங் காணாய் கடிதிடித் துரறிக்
காரோ வந்தது காதல ரேறிய
தேரோ வந்தது செய்வினை முடித்தெனக்
கா அர்க் குரவையொடு கருங்கயல் நெடுங்கட்
கோற்றொடி மாதரொடு குடகர் தோன்றத |
|
கோல்வளை
மாதே கோலங்கொள்ளாய் - திரட்சி யுடைய வளையல்களை யணிந்த நங்கையே ஒப்பனைசெய்து
கொள்வாயாக, காலம் காணாய் கடிது இடித்து உரறிக் காரோ வந்தது - காலத்தைக் காண்பாயாக,
கடிதாக இடித்து உருமிக் கொண்டு கார்ப்பருவமோ வந்தது, காதலர் ஏறிய தேரோ வந்தது செய்வினை
முடித்து என - நம் காதலர் ஏறிய தேரோ செய்வினை முடித்து மீண்டது என்று, கார்க்குரவையொடு
- கார் காலத்தைக் குறித்துப் பாடும் குரவைப் பாட்டுடன், கருங்கயல் நெடுங்கண் கோற்றொடி
மாதரொடு குடகர் தோன்ற - கரிய கயல்போன்ற பெரிய கண்களையும் திரண்ட வளைகளையுமுடைய
மகளிருடன் குடகர்கள் தோன்ற ;
'மாதே கோலங்கொள்ளாய் ; கார் வந்தது
; தேர் வந்தது' எனத் தோழி தலைமகட்குக் கூறும் பொருளமைந்த குரவைப் பாட்டென்க. காரோ
தேரோ என்னும் ஓகாரங்கள் சிறப்பு. தேரோ வந்தது என விரைவுபற்றி இறந்த காலமாகக்
கூறப்பட்டது. செய்வினை - போர். குடகர் - குடநாட்டுக் கூத்தர். குடகர் மாதரொடு கூடிக்
குரவையொடு தோன்ற வென்க. |
|