|
125
|
கூத்துள் படுவோன் காட்டிய
முறைமையின்
ஏத்தின ரறியா இருங்கலன் நல்கி
வேத்தினம் நடுக்கும் வேலோன் இருந்துழி |
|
கூத்துள்
படுவோன் காட்டிய முறைமையின்-ஆடலாசிரியன் காட்டிய முறைப்படி, ஏத்தினர் அறியா இருங்கலன்
நல்கி - தம்மைப் புகழ்ந்து பாடினோர்க்கு அன்னோர் முன்னறி யாத பேரணிகளைக் கொடுத்து,
வேத்தினம் நடுக்கும் வேலோன் இருந்துழி - அரசர் கூட்டத்தினை நடுங்கச் செய்யும் வேற்படை
யினையுடைய மன்னவன் இருந்தபொழுது ;
கூத்துள் படுவோன் - தன்னிடத்துள்ள ஆடலாசிரியன்
; காட்டிய முறைமையின் - அவன் அறிவித்த வரிசைக்குத் தக. ஏத்தினர் அறியா விருங்கலன்
என்பதனை 1 "விரற்செறி மரபின செவித்தொடக்குநரும்,
செவித்தொடர் மரபின விரற்செறிக்குநரும், அரைக்கமை மரபின மிடற்றியாக்குநரும், மிடற்றமை
மரபின வரைக்கி யாக்குநரும்" என்பதனானறிக.
|
1
புறம். 377.
|
|