|
170
|
சஞ்சயன் போனபின்
கஞ்சுக மாக்கள்
எஞ்சா நாவினர் ஈரைஞ் ஞூற்றுவர்
சந்தின் குப்பையுந் தாழ்நீர் முத்தும்
தென்ன ரிட்ட திறையொடு கொணர்ந்து
கண்ணெழுத் தாளர் காவல் வேந்தன்
மண்ணுடை முடங்கலம் மன்னவர்க் களித்தாங்கு
ஆங்கவ ரேகிய பின்னர் மன்னிய |
|
கஞ்சுகமாக்கள்
எஞ்சா நாவினர் ஈரைஞ்ஞூற்று வர் - மொழிதவறாத நாவினையுடையரான கஞ்சுகமாக்கள் ஆயி
ரவர், சந்தின் குப்பையும் தாழ்நீர் முத்தும் தென்னர் இட்ட திறையொடு கொணர்ந்து -
சந்தனக் குவியலும் நீர்மை தங்கிய முத்தும் பாண்டியர் இட்ட திறைப் பொருளுடன் கொண்டுவர,
கண்ணெழுத்தாளர் - திருமுகமெழுதுவோர், காவல் வேந்தன் - மாநிலங் காவலனாகிய மன்னவனது,
மண்ணுடை முடங்கல் - இலச்சினையிடப்பட்ட திருமுகத்தினை, அம் மன்னவர்க்கு அளித்து -
அவ்வரசர்க்கு அளிக்க, ஆங்கவர் ஏகிய பின்னர் - அவர் அது கொண்டு போயபின்;
எஞ்சாமை - சோர்வின்மையுமாம். தென்னர்
விடுத்த கஞ்சுக மாக்கள் ஈரைஞ்ஞூற்றுவ ரென்க. தாழ்நீர் - கடலுமாம். சந்தும் முத்துமாகிய
தென்னரிட்ட திறையெனக் கொண்டு ஓடுவை அசை யாக்கலுமாம். சந்தனமும் முத்தும் தென்னர்க்குரியன
வாதல் 1 "தன்கடற் பிறந்த முத்தினாரமும்,
... சந்தினாரமும், இருபே ரார மும் எழில்பெற வணியும், திருவீழ்மார்பிற் றென்னவன்"
"2"கோவா மலையாரங் கோத்த கடலாரம்,
... தென்னர்கோன் மார்பினவே" என்பவற்றா னறியப்படும். கண்ணெழுத்தாளர் - ஈண்டுத்
திருமுக மெழுதுவார். முடங்கல் - திருமுகம். வேந்தன் முடங்கலை அம் மன்னவர்க்குக் கண்ணெழுத்தாளர்
எழுதி இலச்சினையிட்டு அவர் கைக் கொடுத்தாரென்க. கொணர்ந்து அளித்து என்பவற்றைக்
கொணர அளிப்பவெனத் திரிக்க. ஆங்கு, அசை. |
1
அகம். 13. 2
சிலப். 17. உள்வரி-1.
|
|