|
185 |
உத்தரன் விசித்திரன்
உருத்திரன் பைரவன்
சித்திரன் சிங்கன் றனுத்தரன் சிவேதன்
வடதிசை மருங்கின் மன்னவ ரெல்லாம்
தென்றமி ழாற்றல் காண்குதும் யாமெனக்
கலந்த கேண்மையிற் கனக விசயர்
நிலந்திரைத் தானையொடு நிகர்த்து மேல்வர |
|
உத்தரன்
விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்தி ரன் சிங்கன் தனுத்திரன் சிவேதன் (என்ற)-,
வடதிசை மருங் கின் மன்னவர் எல்லாம் - வடநாட்டிலுள்ள அரசரனைவரும், தென்றமிழ் ஆற்றல்
காண்குதும் யாம் என - தென்றமிழின் ஆற்றலை யாம் காண்பேம் என்று, கலந்த கேண்மையில்
கனக விசயர் - கனக விசயருடன் ஒன்றிய நட்புடையராய், நிலந் திரைத் தானையொடு நிகர்த்து
மேல்வர - பூமியைத் திரைக்கின்ற பெருஞ் சேனையுடன் போருக்கு எதிர்த்துவர;
கேண்மையினாலே கனகவிசயர் தானையொடு ஒத்து
மேல் வர என்றுமாம். திரைத்தல் - சுருக்குதல்; நிலவகலத்தைத் தன்னுள்ளே யடக்குதல்;
1 "நிலந்திரைக்குங் கடற்றானை" என்பதன்
உரை காண்க.
|
1
புறம். 96.
|
|