|
15
|
வடதிசை மருங்கின் மன்னர்த
முடித்தலைக்
கடவு ளெழுதவோர் கற்கொண் டல்லது
வறிது மீளுமென் வாய்வா ளாகில்
செறிகழல் புனைந்த செருவெங் கோலத்துப்
பகையரசு நடுக்காது பயங்கெழு வைப்பிற்
குடிநடுக் குறூஉங் கோலே னாகென |
|
வடதிசை
மருங்கின் மன்னர்தம் முடித்தலைக் கடவுள் எழுதவோர் கற்கொண்டு அல்லது - வடநாட்டு அரசர்களின்
முடியணிந்த தலைமீது தெய்வம் அமைத்தற்குரிய ஒருகல்லை ஏற் றிக்கொண் டன்றி, வறிது மீளும்
என் வாய்வாள் ஆகில் - என் னுடைய வடிக்கப்பட்ட வாள் வறிதே திரும்புமாயின், செறி
கழல் புனைந்த செருவெங் கோலத்துப் பகையரசு நடுக்காது - நெருங்கிய வீரக் கழலணிந்த கொடிய
போர்க்கோலங் கொண்ட மாற்றரசனை நடுங்கச் செய்யாது, பயங்கெழு வைப்பில் குடி நடுக்குறூஉம்
கோலேன் ஆகென - பயன்மிகுந்த நன்னாட்டி லுள்ள குடிமக்களை நடுங்கச் செய்யுங் கொடுங்கோன்மை
யுடையவனாவேன் என உரைக்க ;
தன் செய்கையை வாளின்மேலேற்றிக்
கூறினான். செருவெங் கோலத்தால் எனலுமாம். வைப்பு - நாடு. "1குடிபழி
தூற்றுங் கோலே னாகுக" என நெடுஞ்செழியன் வஞ்சினங் கூறினமையுங் காண்க ; "2குடிபழி
தூற்றுங் கோலனு மல்லன்" என்பதும் அறி யற்பாலது. ஆகவென என்பது விகாரமாயிற்று ; ஆகு
- ஆவேன் எனலுமாம்.
|
1
புறம். 71. 2
சிலப். 23 : 34.
|
|