|
45
|
வருக தாமென வாகைப் பொலந்தோடு
பெருநா ளமயம் பிறக்கிடக் கொடுத்துத்
தோடார் போந்தை தும்பையொடு முடித்துப்
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தன்
ஆடுகொள் மார்போ டரசுவிளங் கிருக்கையின்
|
|
வருக தாம் என - வருகவென்றழைத்து, வாகைப் பொலம்தோடு - பொன்னாலாகிய வாகை மலரினை,
பெருநாள் அமயம் பிறக்கிடக் கொடுத்து - பெரிய நாளில் கொடுக்கும் பொழுதொழிய நெடும்பொழுதிருந்து
கொடுத்து, தோடுஆர் போந்தை தும்பையொடு முடித்து - இதழ் பொருந்திய பனம்பூ மாலையினைத்
தும்பை மாலையோடு சூடி, பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தன்-வீரரைப் பாடும் புறத்துறையெல்லாம்
முடித்துப் பாடல்கொண்ட வென்றியினையுடைய மன்னன், ஆடு கொள் மார்போடு அரசு விளங்கு
இருக்கையின் - வெற்றி கொண்ட மார்போடே விளங்கி யிருக்கும் அரசிருக்கைக் கண்ணே
;
மடிந்தோர் மைந்தரும் அணிந்தோரும்
பொலிந்த மைந்தரும் கலங்கொண்டோரும் வாண் மறவரும் வருகவென அழைத்துக் கொடுத்தென்க.
வாகைப் பொலந்தோடு அளித்தல் வீரர்களின் வீரச் செய்கையைப் பாராட்டியதற்கு அடையாளமாக
அளிக்கும் சிறப்பாகும். கொடுக்குநாளைப் பெருநாளென்றார். அமயம் பிறக்கிட-பொழுது போதாதாம்படி.
இனி, பிறந்த நாள்வயிற் கொடுக்கும் பொழுது பின்னாகும்படி யென்றுரைத்தலுமாம். |
|