4. நீர்ப்படைக் காதை





60

கானலந் தண்டுறைக் கடல்விளை யாட்டினுள்
மாதவி மடந்தை வரிநவில் பாணியோடு
ஊடற் காலத் தூழ்வினை யுருத்தெழக்

கூடாது பிரிந்து குலக்கொடி தன்னுடன்
மாட மூதூர் மதுரை புக்காங்கு


57
உரை
61

        கானல்அம் தண் துறைக் கடல் விளையாட்டினுள் - சோலைசூழ்ந்த குளிர்ந்த துறையையுடைய கடல் விளையாட்டிடத்தே, மாதவி மடந்தை வரி நவில் பாணியோடு - மாதவி பாடிய வரிப்பாட்டுடனே, ஊடற்காலத்து ஊழ்வினை உருத்து எழ - ஊடுதலுண்டாய பொழுது முன்னை வினையானது பயனளிக்க உருக்கொண்டு எதிர்தலான், கூடாது பிரிந்து - மாதவியோடு கூடாதே பிரிந்து சென்று, குலக்கொடி தன்னுடன் மாடமூதூர் மதுரை புக்கு - உயர்குடியிற் பிறந்தோளாகிய கண்ணகியுடன் கூடி மாடங்களையுடைய பழமையான மதுரை நகரினை அடைந்து ;

        கடல் விளையாட்டினுள் - நகரமாந்தரும் மாதரும் கடல் விளையாட்டு நிகழ்த்தும் பொழுதில் ;கடற்றுறைக் கானல் விளையாட்டில் என்றலுமாம். கானல் - கடற்கரைச் சோலை. மடந்தை நவில் வரிப்பாணி யென்க. வரிப்பாணியோடு ஊழ்வினையும் எழ என்க. 1"யாழிசைமேல் வைத்துத் தன் ஊழ்வினை யுருத்ததாகலின், உவவுற்ற முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்" என்றார் முன்னும். உருத்து - வெகுண்டு என்றுமாம்.


1 சிலப். 7 : 55--6.