4. நீர்ப்படைக் காதை




15

செங்குட் டுவன்றன் சினவேற் றானையொடு
கங்கைப் பேர்யாற்றுக் கரையகம் புகுந்து

பாற்படு மரபிற் பத்தினிக் கடவுளை
நூற்றிறன் மாக்களி னீர்ப்படை செய்து


13
உரை
16

       தன் சின வேல் தானையொடு - தனது சினம் பொருந்திய வேலேந்திய சேனையோடு, கங்கைப் பேர்யாற்றுக் கரை யகம் புகுந்து - கங்கையாற்றின் கரையிடத்தே சென்று, பாற்படு மரபிற் பத்தினிக் கடவுளை - யாவரும் வணங்கும் பகுதியிலே பட்ட முறைமையினையுடைய பத்தினிக் கடவுளை, நூல்திறன் மாக்களின் நீர்ப்படை செய்து - நூல்களின் கூறுபாட்டை உணர்ந்தோரால் நீர்ப்படுத்து ;

       பத்தினிக் கடவுள் என்றது கடவுள் எழுதிய கல்லினை. பகுதிப் பட்ட மரபாலே நீர்ப்படை செய்து என்றுமாம். நீர்ப்படை செய்தல் - நீராட்டுதல்.