|
70
|
மாமுனி பொதியின் மலைவலங் கொண்டு
குமரியம் பெருந்துறை யாடி மீள்வேன்
ஊழ்வினைப் பயன்கொல் உரைசால் சிறப்பின்
வாய்வாட் டென்னவன் மதுரையிற் சென்றேன்
|
|
மாமுனி பொதியில் மலைவலங் கொண்டு-அகத்தியனுறையும் பொதியின் மலையை வலஞ்செய்து,
குமரியம் பெருந்துறை ஆடி மீள்வேன் - குமரியின் அழகிய பெரிய துறைக் கண்ணே நீராடி மீளும்
யான், ஊழ்வினைப் பயன்கொல்-முன்னை வினையின் பயனோதான், உரைசால் சிறப்பின் வாய்வாள்
தென்னவன் மதுரையிற் சென்றேன் - புகழ்மிக்க சிறப்பினையுடைய வினைவாய்த்த வாளினையுடைய
பாண்டியனது மதுரை நகரத்துச்சென்றேன் ;
இவ்வாறே, 1"மாதவ முனிவன் மலைவலங்
கொண்டு, குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து, தமர்முதற் பெயர்வோன்" என முன்னர்
வந்தது காண்க. ஆங்குச் சென்று தீயன கேட்டற் கமைந்தே னென்பது கருத்தாக "ஊழ்வினைப்
பயன்கொல்..... சென்றேன்" என்றான் என்க.
|
1.
சிலப். 15 : 14-6.
|
|