4. நீர்ப்படைக் காதை

வலம்படு தானை மன்னவன் றன்னைச்
சிலம்பின் வென்றனள் சேயிழை யென்றலும்


72
உரை
73

        வலம் படு தானை மன்னவன் தன்னை - வெற்றியுண்டா தற்குக் காரணமாகிய சேனையினையுடைய பாண்டிய மன்னனை, சிலம்பின் வென்றனள் சேயிழை என்றலும் - கண்ணகி தன் சிலம்பினால் வெற்றி கொண்டனள் என்ற செய்தியைக் கேட்ட வளவில் ;

சிலம்பின் வென்றனள் என்றது பாண்டியன் கோவலனைக் கொல்வித்துக் கண்ணகியால் தன் அரசியல் பிழைத்தமையறிந்து அரசு கட்டிலிலிருந்தவாறே துஞ்சிய வரலாற்றை அடக்கியுள்ளது.