4. நீர்ப்படைக் காதை


75

தாதெரு மன்றத்து மாதரி யெழுந்து
கோவலன் தீதிலன் கோமகன் பிழைத்தான்
அடைக்கல மிழந்தேன் இடைக்குல மாக்காள்
குடையும் கோலும் பிழைத்த வோவென
இடையிரு ளியாமத் தெரியகம் புக்கதும்


74
உரை
78

        தாது எரு மன்றத்து மாதரி யெழுந்து-தாதாகிய எருப் பொருந்திய மன்றத்திடத்தே மாதரி தோன்றி, கோவலன் தீது இலன் - கோவலன் குற்றமுடையனல்லன், கோமகன் பிழைத் தான் - மன்னனே தவறிழைத்தான், அடைக்கலம் இழந்தேன் இடைக்குல மாக்காள்-இடையர் குலத்துப் பிறந்த மக்காள் யான் அடைக்கலப் பொருளைக் காக்குந் தகுதியின்றி இழந்து விட்டேன், குடையுங் கோலும் பிழைத்தவோவென-குடிகட்கு நிழல் செய்யுங் குடையும் நீதிசெய்யும் செங்கோலும் வழுவினவோ என்று கூறி, இடையிருள் யாமத்து எரியகம்புக்கதும் - இருள்மிக்க இடையாமத்தே தான் தீயிடை மூழ்கியதும் ;

        தாது எரு - பொடியாகிக் கிடக்கும் எரு. அரசன் குடிகளிடத்து அருளும் நீதியும் உடையனாதல் இன்றியமையாத தாகலான், அவ் விரண்டன் குறியாகிய குடையுங் கோலும் பிழைத்தவோ வென்றாள். பிழைத்தவோ என்றாள், முன்னர்ப் பிழையாமைபற்றி.