|
100
|
கண்ணகி தாதை கடவுளர் கோலத்து
அண்ணலம் பெருந்தவத் தாசீ வகர்முன்
புண்ணிய தானம் புரிந்தறங் கொள்ளவும்
|
|
கண்ணகி தாதை கடவுளர் கோலத்து-கண்ணகியின் தந்தை முனிவர் கோலத்துடன், அண்ணல் அம்பெருந்
தவத்து ஆசீவகர்முன் - தலைமை யமைந்த மிக்க தவத்தினையுடைய ஆசீவகர் முன்னர், புண்ணியதானம்
புரிந்து அறங்கொள்ளவும் - புண்ணியமாகிய தானஞ்செய்து துறவத்தினை மேற்கொள்ளவும் ;
கடவுளர் - ஈண்டு முனிவர். 1"கந்தன்
பள்ளிக் கடவுளர்க் கெல்லாம்" என வருதல் காண்க. ஆசீவகம் - சமண சமயத்தின் வகையுள்
ஒன்று. புண்ணியதானம் - பிறப்பினை யொழித்தற்குச் செய்யுந் தானம் ; 2"போதியின்கீழ்
மாதவர்முன் புண்ணியதானம் புரிந்த, மாதவி தன்றுறவும்" என மேல் வருவதுங் காண்க.
|
1.
சிலப், 11 : 5.
2. சிலப். 29. "காதலன்றன்."
|
|