|
110
|
என்வாய்க் கேட்டோர் இறந்தோ
ருண்மையின்
நன்னிர்க் கங்கை யாடப் போந்தேன்
மன்னர் கோவே வாழ்க ஈங்கெனத்
|
|
என்வாய்க் கேட்டோர் இறந்தோர் உண்மையின் - என்னிடத்துக் கேட்டவர் இங்ஙனஞ் செய்யாநிற்க
அவருள் இறந்தோரும் உண்டாகையால், நன்னீர்க் கங்கையாடப் போந்தேன் - தூய நீரினையுடைய
கங்கையில் நீராட வந்தேன், மன்னர் கோவே வாழ்க ஈங்கு என - மன்னர் மன்ன இவ்வுல
கத்து வாழ்வாயாக என்று போற்ற ;
யான் கூறியது காரணமாக அவர் இறந்தபழி
என்னைச் சாரு மாகலான் அது தொலைதற்குக் கங்கையாடப் போந்தேன் என்றான் என்க. நன்னீர்
- தன்கண் ஆடினாரைத் தூய்மை செய்யுநீர். |
|