4. நீர்ப்படைக் காதை





115

தோடார் போந்தை தும்பையொடு முடித்த
வாடா வஞ்சி வானவர் பெருந்தகை
மன்னவன் இறந்தபின் வளங்கெழு சிறப்பின்

தென்னவன் நாடு செய்ததீங் குரையென


112
உரை
115

        தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்த-இதழ் மிக்க பனம்பூவினைத் தும்பைப் பூவொடு சூடிய, வாடாவஞ்சி வானவர் பெருந்தகை - வஞ்சி நகரத்தையுடைய சேரர் பெருந்தகை, மன்னவன் இறந்தபின் வளங்கெழு சிறப்பின் தென்ன வன் நாடு செய்தது ஈங்கு உரையென- நெடுஞ்செழியன் இறந்த பின்னர் செல்வம் மிக்க சிறப்பினையுடைய பாண்டியனாடு செய்ததனை இப்பொழுது உரைப்பாயாக என்று கேட்க ;

        வாடாவஞ்சி, வெளிப்படை. மன்னவன் - பாண்டியன் நெடுஞ் செழியன்.