4. நீர்ப்படைக் காதை



125


பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு

வேம்புமுதல் தடிந்த ஏந்துவாள் வலத்துப்
போந்தைக் கண்ணிப் பொறைய கேட்டருள்


124
உரை
126

        பழையன் காக்கும் குழைபயில் நெடுங்கோட்டு - பழையன் என்பான் காத்த தளிர்மிக்க நீண்ட கொம்புகளை யுடைய, வேம்பு முதல் தடிந்த ஏந்து வாள்வலத்துப் போந் தைக் கண்ணிப் பொறைய கேட்டருள் - வேம்பின் அடியினைக் குறைத்த ஏந்திய வாளின் வெற்றியினையும் பனம்பூ மாலையினை யும் உடைய பொறையனே கேட்டருள்வாயாக ;

        பழையன் - ஓர் குறுநில மன்னன் ; மோகூரில் இருந்தவன். பழையன் காவன் மரமாகிய வேம்பினைத் தடிந்ததனை, 1"பழையன் காக்குங் கருஞ்சினை வேம்பின், முரரை முழுமுதல் துமியப் பணணி" என்பதனானறிக.


1 பதிற். 5. பதிகம்.