|
25
|
நீணில மன்னர் நெஞ்சுபுக லழித்து
வானவர் மகளிரின் வதுவைசூட் டயர்ந்தோர்
|
|
நீள்நிலமன்னர்
நெஞ்சுபுகல் அழித்து - பெரிய உலகாளும் அரசரது உள்ளத்தருக்கினைத் தொலைத்து, வானவர்
மகளிரின் வதுவை சூட்டு அயர்ந்தோர் - தேவமகளிரால் மணமாலை சூட்டப் பெற்றோரும் ;
புகல் - செருக்கு ; புகல்வு எனவும்படும்
; 1"மாறுபொரு தோட்டிய புகல்வின்"
என்பது காண்க. வதுவை - மணமாலை ; ஆகுபெயர். வதுவைசூட் டயர்ந்தோர் என்றது போர்க்களத்துப்
பொருது இறந்தோரை என்க.
|
1.
குறிஞ். 135.
|
|