|
160
|
இளங்கோ வேந்தர் இறந்ததற் பின்னர்
வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு
செங்கோற் றன்மை தீதின் றோவென
|
|
இளங்கோ வேந்தர் இறந்ததற்பின்னர் - இளவரசராகிய ஒன்பது மன்னரும் இறந்ததன் பின்,
வளங்கெழு நன்னாட்டு - செல்வமிக்க நல்ல நாட்டின்கண், மன்னவன் கொற்றமொடு செங்கோல்
தன்மை தீது இன்றோ என - அரசனுடைய வெற்றியும் செங்கோலின் இயல்பும் குற்றிமின்றியுள்ளனவோ
என்று கேட்ப ;
இளங்கோ வேந்தரென்றது இக்காதையுள்
முன்னர்க் கூறிய ஒத்த பண்பினராம் ஒன்பது இளவரசரை. வளங்கெழு நாடு - சோழ நாடு. |
|