4. நீர்ப்படைக் காதை




மாடல மறையோன் கொள்கென் றளித்தாங்கு
ஆரிய மன்னர் ஐயிரு பதின்மரைச்
சீர்கெழு நன்னாட்டுச் செல்கவென் றேவித்


176
உரை
178

        ஆங்கு ஆரிய மன்னர் ஐயிருபதின்மரை - ஆரிய நாட்டரசராகிய நூற்றுவரை, சீர்கெழு நன்னாட்டுச் செல்க வென்று ஏவி - நும் சிறப்புற்ற நல்ல நாட்டின்கண் செல்லுமின் என்று கட்டளையிட்டு ;

        ஆரிய மன்னர் ஐயிருபதின்மராவார் செங்குட்டுவனுக்கு நட்பாளராகிய நூற்றுவர் கன்னர் ; இவர்கள் செங்குட்டுவன் தானையுடன் கங்கையைக் கடத்தற்கு நாவாய்கள் தந்தமையைக் 1"கால் கோட் காதையா னறிக.


1. சிலப். 26: 176-7,