4. நீர்ப்படைக் காதை



215

சிறுகுறுங் கூனுங் குறளுஞ் சென்று

பெறுகநின் செவ்வி பெருமகன் வந்தான்
நறுமலர்க் கூந்தல் நாளணி பெறுகென


214
உரை
216
        சிறு குறுங் கூனும் குறளும் சென்று - சிறு தொழில் செய்யும் குறிய கூனும் குறளும் சென்று, பெறுகநின் செவ்வி பெருமகன் வந்தான் - அரசன் வந்தனன் நின்எழிலைப் பெறுவாயாக, நறுமலர்க் கூந்தல் நாள்அணி பெறுகென - நினது நறிய மலர்க்குழல் நாளொப்பனை பெறுவதாக என்று கூறவும் ;

கூனும் குறளு முதலாயினார் அந்தப்புரத்திலே குறுந்தொழில் செய்வாராதல் 1"கூனுங் குறளும் ஊமுங் கூடிய, குறுந்தொழி லிளைஞர் செறிந்து சூழ்தர "என முன்னர்ப் போந்ததனாலும் அறியப்படும்.


1. சிலப். 20 : 17.