4. நீர்ப்படைக் காதை



30

நாள்விலைக் கிளையுள் நல்லம ரழுவத்து

வாள்வினை முடித்து மறத்தொடு முடிந்தோர்



29
உரை
30

       நாள் விலைக் கிளையுள் - தம் வாழ்நாளை விலையாகத் தரும் மறவருள், நல்அமர் அழுவத்து - நல்ல பொரு களப் பரப்பிலே, வாள் வினைமுடித்து மறத்தொடு முடிந்தோர் - வாளாற் செய்யும் வினையனைத்தையும் செய்து முடித்து வீரத்தோடு பட்டோரும் ;

       நாள்விலைக் கிளை - அரசனளித்த செஞ்சோற்றுக்கும் சிறப்புக்கும் விலையாகத் தம் வாழ்நாளைத் தரும் மறவர். கிளையுள் எனபதனை இடைநிலை விளக்காகக் கொண்டு முன்னும் பின்னுங் கூட்டுக.