4. நீர்ப்படைக் காதை



குழிகட் பேய்மகள் குரவையிற் றொடுத்து
வழிமருங் கேத்த வாளொடு மடிந்தோர்


31
உரை
32

        குழிகட் பேய்மகள் குரவையின் தொடுத்து - குழிந்த கண்ணினையுடைப் பேய்மகள் மண்டிலமிட் டாடுங் குரவை யுடன் தொடுத்து, வழிமருங்கு ஏத்த வாளொடு மடிந்தோர் - தம் வழியிலுள்ளாரையும் போற்றும்படித் தம் வாளோடு பட்டோ ரும் ;

        தொடுத்து - இயைத்து. இவர் வீரங் கண்டு அவர் வழியிலுள்ளா ரையும் ஏத்திற்று என்க. மருங்கு - கிளை.