4. நீர்ப்படைக் காதை

35

மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடியத்
தலைத்தார் வாகை தம்முடிக் கணிந்தோர்


35
உரை
36

        மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடியத் தலைத் தார் வாகை தம் முடிக்கு அணிந்தோர்-மாறுபட்டுத் தம்பாற் பொர வந்தோர் வாளுடனே பட முதன்மையுடைய வாகை மாலையினைத் தம் முடியிற் சூடியோரும் ;

        தார்-தூசிப் படையெனக் கொண்டு, தலைவந்தோராகிய தூசிப் படையினர் மடிய எனலுமாம். வாகையணிந்தோர் - பகைவரது புறக்கொடை கண்டு மீண்டோராவர்.