1. மங்கலவாழ்த்துப் பாடல்



5


ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு
மேரு வலந்திரித லான்.

4
உரை
6

       ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் - யாம் ஞாயிற்றைப் போற்றுவேம்; ஞாயிற்றைப் போற்றுவேம்; காவிரி நாடன் திகிரிபோல் - பொன்னி நாட்டையுடைய சோழனது ஆழிபோல், பொற்கோட்டு மேருவலம் திரிதலான் - பொன்னாலாய கொடுமுடியை யுடைய மேருவை வலமாகத் திரிதருதலால்.

       திகிரி - ஆக்கினாசக்கரம். பொன் - பொலிவுமாம். இது தொழில் பற்றிய உவமம். நச்சினார்க்கினியர் புறத்திணையியலுரையில், 'குடை நிழல் மரபு' என்புழி, 'மரபு என்றதனாற் செங்கோலும் திகிரியும் போல்வனவற்றைப் புனைந்துரையாக்கலுங் கொள்க' என்று உரை கூறி, திகிரியைப் புனைந்துரைத்தற்கு இதனையே எடுத்துக் காட்டியுள்ளார்.