1. மங்கலவாழ்த்துப் பாடல்

40
அவரை,
இருபெருங் குரவரும் ஒருபெரு நாளால்
மணவணி காண மகிழ்ந்தனர் மகிழ்ந்துழி


40
உரை
42

       அவரை - அத்தன்மையார் இருவரையும், இருபெருங் குரவரும் - பெருமையுடைய இருவர் குரவர்களும், ஒரு பெருநாளால் - ஒரு பெருநாளிலே, மண அணி காண மகிழ்ந்தனர் மணக்கோலங் காண விரும்பினர்; மகிழ்ந்துழி - விரும்பியவளவிலே,

       குரவர் - தந்தையும் தாயும். மணவணி காண என்பது ஒரு சொல்லாய் அவரை யென்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. நாளால் - நாளில்; வேற்றுமை மயக்கம். மகிழ்தல் - விரும்புதல் உழி - அளவு.