1. மங்கலவாழ்த்துப் பாடல்

45
அவ்வழி
முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலம் வெண்குடை
அரசெழுந்ததொர் படியெழுந்தன அகலுள்மங்கல அணி யெழுந்தது


45
உரை
47

       அவ்வழி - அவ்விடத்து, முரசு இயம்பின - முரசு முதலியன இயம்பின; முருடு அதிர்ந்தன - மத்தளம் முதலியன அதிர்ந்தன; முறை எழுந்தன பணிலம் - சங்கம் முதலியன முறையே முழங்குத லெழுந்தன; வெண்குடை அரசு எழுந்த தொர் படி எழுந்தன - வெண்குடைகள் அரசன் உலா வெழுந்த படியாக எழுந்தன; அகலுள் மங்கல அணி எழுந்தது - ஊரிலே மங்கலநாண் வலஞ் செய்தது.

       முருடு - பத்தலுமாம். ஓர், விகாரம். அகலுள் - தெருவுமாம். எழுந்தது - எழுந்து வலஞ் செய்த தென்றபடி. 'மங்கலவணி எங்கும் எழுந்தது' என்ற அடியார்க்குநல்லார் கருத்து விளங்குமாறின்று.