மாலை
தாழ் சென்னி வயிரமணித் தூணத்து - மாலைகள் பொருந்திய சென்னியையுடைய வயிரமணித்
தூண்களையுடைய மண்டபத்தில், நீல விதானத்து நித்திலப் பூம் பந்தர்க் கீழ் - நீலப்
பட்டினாலாகிய மேற்கட்டியின் கீழ் அமைத்த அழகிய முத்துப் பந்தரிடத்தே,
தாழ்தல் - தங்குதல்; தொங்குதலுமாம்.
தூண் - மண்டபத்திற்கு ஆகுபெயர். அத்து, சாரியை. பூ - பொலிவு. முத்து, ஒளி பெறுதல்
நோக்கி நீல விதானங் கூறினார். அக்காலத்து முத்து நோக்குவார் ஒப்புக்கு நீலப்பட்டினை
விரித்து நோக்குவர் என்ப.
|