|
|
மாமழை
போற்றுதும் மாமழை போற்றுதும் நாமநீர் வேலி யுலகிற்கு அவன்அளிபோல் மேல்நின்று தான்சுரத்த
லான். |
|
மா
மழை போற்றுதும் மா மழை போற்றுதும் - யாம் பெரிய மழையைப் போற்றுவேம்; பெரிய மழையைப்
போற்று வேம்; நாம நீர் வேலி உலகிற்கு - அச்சத்தைத் தருகின்ற கடல்சூழ் உலகிற்கு,
அவன் அளிபோல் - அவன் அளி செய்யு மாறுபோல, மேல் நின்று தான் சுரத்தலான் - மேலாகி
நின்று தன் பெயலால் வளஞ்சுரத்தலால்.
நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது.
வேலி - சூழ்தல். அளி - ஈகை. தான், அசை. மேலே பெயர் கூறினமையின் அவன் எனச் சுட்டி
யொழிந்தார். |
|