1. மங்கலவாழ்த்துப் பாடல்

10
பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்
வீங்குநீர் வேலி யுலகிற் கவன்குலத்தோடு
ஓங்கிப் பரந்தொழுக லான்.


10
உரை
12

       பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் - யாம் அழகிய புகாரினைப் போற்றுவேம்; அழகிய புகாரினைப் போற்றுவேம்; வீங்கு நீர் வேலி உலகிற்கு - கடலை வேலியாக வுடைய உலகின்கண், அவன் குலத்தோடு ஓங்கிப் பரந்து ஒழுக லான் - தொன்றுதொட்டு அவன் குலத்தோடு பொருந்தி உயர்ந்து பரந்து நடத்தலால்.

       பூ - அழகு, பொலிவு. பூம்புகார், மெலித்தல் விகாரம். வீங்கு நீர் - மிக்க நீர் ; ஆவது கடல். அவன் குலத்தினைப் புகழ்வார் இதனையும் புகழ்வரென்பது கொள்க.

       [அடி. இறப்பப் புனைந்துரைத்தற்குக் குடை நிழன் மரபு என்றதனால் திகிரியும் கொடையும் உயர்ச்சியும் புனைந்து கூறியவாறாயிற்று.] [அரும். இவை நான்கு சிந்தியல் வெண்பாவும் செம்பியனையும் புகாரினையும் சிறப்பித்தன.]