1. மங்கலவாழ்த்துப் பாடல்


மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
ஈகைவான் கொடியன்னாள் ஈராறாண் டகவையாள்;


23
உரை
24

       மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குலக்கொம்பர் ஈகை வான் கொடி அன்னாள் - விசும்பிடத்து மழையை நிகர்த்த வண்மை பொருந்திய கையையுடைய மாநாய்கனது குலத்திற் றோன்றிய பூங்கொம்பும் மேலான பொற்கொடியும் போல் வாள், ஈராறு ஆண்டு அகவையாள் - பன்னீராண்டிற்கு உட்பட்ட பிராயத்தினளாயினள்.

       மாநாய்கன் - சிறப்புப் பெயர் போலும். ஈகை - பொன். மேல் 'பொன்னங் கொடிபோலப் போதந்தாள்' என்பது காண்க. வான் கொடி - வான வல்லியுமாம். அகவை - உட்பட்டது.