போதில்
ஆர் திருவினாள் புகழுடை வடிவு என்றும் - தாமரைப் பூவிற் பொருந்திய திருமகளின் புகழுடைய
வடிவு இவள் வடிவை யொக்குமென்றும், தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்
- குற்றமில்லாத அருந்ததியின் கற்பு இவள் கற்பை யொக்கு மென்றும், மாதரார் தொழுது
ஏத்த - உலகின் மாதரார் தன்னைத் தொழுது ஏத்தும்படி, வயங்கிய பெருங் குணத்துக் காதலாள்
- விளங்கிய பெருங்குணங்களைக் காதலிப்பாள்; பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ
- அவள் கண்ணகி யென்று பெயர் கூறப்படுவாள்.
திருவினாள், ஒரு சொல். இவள் வடிவு
என்று வருவித்துரைக்க. தீது - பிறர்நெஞ்சு புகுதல்;
1"மண்டிணி
ஞாலத்து மழைவளந் தரூஉம் பெண்டி ராயிற் பிறர்நெஞ்சு புகாஅர்"
என்பது காண்க.
திறம் - கற்பு. பெருங் குணத்தாற்
காதலிக்கப்படுபவள் என்றுமாம். மன்னும், மன், ஓ என்பன அசைநிலை இடைச்சொற் கள்.
|