|
50
|
படுதிரை சூழ்ந்த பயங்கெழு
மாநிலத்
திடைநின் றோங்கிய நெடுநிலை மேருவிற்
கொடிமதின் மூதூர் நடுநின் றோங்கிய
தமனிய மாளிகைப் புனைமணி யரங்கின்
வதுவை வேண்மாள் மங்கல மடந்தை
மதியேர் வண்ணங் காணிய வருவழி
|
|
படுதிரை
சூழ்ந்த பயங்கெழு மாநிலத்து-ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த பயன் பொருந்திய இப் பெரிய
வுலகத்து, இடை நின்று ஓங்கிய நெடுநிலை மேருவின் - நடுவிலே நின்று உயர்ந்த நீண்ட சிமயங்களையுடைய
மேருவரைபோல, கொடிமதில் மூதூர் நடுநின்று ஓங்கிய - கொடிகட்டிய மதிலினையுடைய பழம் பதியாகிய
வஞ்சியின் இடையே நின்றுயர்ந்த தமனிய மாளிகைப் புனை மணி யரங்கின் - பொன் மாளிகையின்
கண் மணிகளால் அழகுசெய்த நிலா முற்றத்திருந்து, வதுவை வேண்மாள் மங்கலமடந்தை - பட்டத்துத்
தேவியாகிய வதுவைவேண்மாள், மதியேர் வண்ணங் காணிய வருவழி - திங்களின் அழகினைக்
காணவந்த காலை ;
படுதிரை, ஆகுபெயர். உலகமும் அதன் நடுவுள்ள
மேருவும் வஞ்சிக்கும் அதன் நடுவுள்ள தமனிய மாளிகைக்கும் உவமை. வதுவை - கல்யாணம். வேண்மாள்
- வேள்குல மகள்; பெயர் ஏர்- எழுச்சியுமாம். |
|