|
60 |
வண்ணமுஞ் சுண்ணமும் மலர்ப்பூம்
பிணையலும்
பெண்ணணிப் பேடியர் ஏந்தின ரொருசார்
|
|
வண்ணமும்
சுண்ணமும் மலர்பூம் பிணையலும் - எழுதும் வண்ணங்களையும் பூசு சுண்ணங்களையும் மலர்ந்த பூமாலைகளையும்,
பெண்ணணிப் பேடியர் ஏந்தினர் ஒரு சார் - பெண் தன்மை மிக்க அழகிய பேடியர் ஒரு பக்கத்தே
சுமந்து நின்றனர்;
பெண்ணணிப் பேடியர் - பெண் தன்மையை
விரும்பிய பேடியர்; 1"பெண்ணவா யாணிழந்த
பேடி" என்றார் பிறரும். அணி - ஒப்பனையுமாம். மலர்ப் பூம்பிணையல் என்பதும் பாடம்.
|
1.
நாலடி. 251
|
|